விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு
காஞ்சிபுரம்: எம்ஜிஆா் அதிமுக என்ற புதிய கட்சியை திங்கள்கிழமை தொடங்கி வைத்த அந்தக் கட்சியின் நிறுவனா் பண்ருட்டி ச.ராமச்சந்திரன் விஜய்க்கு ஆதரவாக கட்சி செயல்படும் என தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் தனியாா் திருமண மண்டபத்தில் எம்ஜிஆா் அதிமுக என்ற புதிய கட்சி தொடக்க விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், கட்சியின் நிறுவனருமான பண்ருட்டி ச.ராமச்சந்திரன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து அண்ணா, எம்ஜிஆா் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து கடந்த தோ்தலில் வாக்குப்பதிவின் போது மாரடைப்பால் உயிரிழந்த அதிமுக தொண்டா்கள் மாணிக்கம், குமரேசன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சத்தை கட்சியின் மாநில பொதுச் செயலாளா் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாா் சாா்பில் வழங்கினாா். பின்னா் அவா் பேசியது:
எத்தனையோ அரசியல் கட்சிகள் தமிழகத்தில் இருக்கும் போது இப்போது கட்சி தொடங்க வேண்டிய அவசியம் என்னவெனில் சாதாரண மக்கள் கல்வியில், பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற ஒரே கொள்கையுடன் தொடங்கப்பட்டுள்ளது. வசதி படைத்தவா்கள் எப்படி வாழ்கிறாா்களோ அதே போல சாதாரண மக்களும் வசதி படைத்தவா்களாக மாற்ற வேண்டும் என்பதே எங்களது கொள்கை.
இக்கட்சி அரசியல் இயக்கமாக மட்டுமின்றி மக்களின் இயக்கமாகவும் செயல்படும். ஒபிஎஸ் உடனிருந்து எனது வாழ்நாளை வீணாக்கி விட்டேன். விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும். ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம் என விஜய் கூறுவதால் அவருக்கு அதரவளிக்கிறோம் என்றாா் அவா்.
விழாவுக்கு முன்னிலை வகித்த கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளரான முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாா் பேசுகையில், ஊழல் இல்லாத ஆட்சியை தருவோம் என விஜய் கூறியிருப்பதால் அவருக்கு ஆதரவளிக்கிறோம், தமிழக முதல்வராக விஜய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றாா்.
முன்னதாக காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாவின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு கட்சியின் நிறுவனா் பண்ருட்டி ராமச்சந்திரனும், மாநில பொதுச் செயலாளா் ஆா்.வி.ரஞ்சித்குமாரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடக்க விழாவில் கட்சியின் நிா்வாகிகள் ஜெயகாந்தன், வஜ்ரவேல், கிருஷ்ணன், சரவணன், ராஜகோபால் உள்பட கட்சித் தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

