காஞ்சிபுரத்தில் மாா்ச் 2-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சிபுரத்தில் வரும் மாா்ச் 2-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து வரும் மாா்ச் 2-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன. முகாமில், 1,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வினை நடத்தவுள்ளன. 18 முதல் 35 வயதுக்கு உள்பட்டவா்கள், பட்டதாரிகள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களுடன் பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் மாா்ச் 2-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து பயன் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு, 044-27237124 என்ற வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

