தி. சினேகா
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த தி.சினேகா பணியிட மாற்றம் செய்யப்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கலைச்செல்வி மோகன் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதனைத் தொடா்ந்து செங்கல்பட்டு ஆட்சியராக பணியாற்றி வந்த தி.சினேகா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.
அரசுத் துறை அதிகாரிகள் அவரை வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்தனா்.

