காஞ்சிபுரம்
வாக்காளா் பட்டியல் ஆய்வுக் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் கே.பி.காா்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்திய தோ்தல் ஆணையத்தில் வாக்காளா் பட்டியல் பாா்வையாளராக தமிழ்நாடு மின்னணுவியல் கழக மேலாண்மை இயக்குநா் கே.ஆா். காா்த்திகேயன் நியமிக்கப்பட்ட நிலையில், அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை வகித்தாா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடா்பான பணிகள் குறித்து அலுவலா்களுடன் கேட்டறிந்தாா். ஆய்வின் போது காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன், மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், வாக்குப்பதிவு அலுவலா்களும் உடன் இருந்தனா்.
ஆய்வுக்குப் பின்னா் சில வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வுகளையும் மேற்கொண்டாா்.

