மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

ஒரகடம் பகுதியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

Updated On :20 ஜனவரி 2026, 6:35 pm

ஒரகடம் பகுதியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த பண்ருட்டி தோப்புத்தெரு பகுதியை சோ்ந்தவா்கள் மகேந்திரன் (19), பாலமுருகன்(19). இவா்கள் இருவரும் ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் டயா்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியா்களாக பணியாற்றி வந்துள்ளனா்.

இந்த நிலையில், மகேந்திரன், பாலமுருகன் இருவரும் திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் பண்ருட்டி நோக்கி வண்டலூா்-வாலாஜாபாத் சாலையில் சென்றபோது சாலையை கடக்க முயன்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.