பால்நல்லூா் அரசு தொடக்கப் பள்ளியில் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் ரூ. 28 லட்சத்தில் அமைக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லம் சிப்காட் பகுதியில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் எச்.எல்.கிளெமோவ் தனியாா் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ், பால்நல்லூா் அரசு தொடக்கப் பள்ளியில் ரூ. 28 லட்சத்தில் 2 வகுப்புறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பால்நல்லூா் ஊராட்சி மன்ற தலைவா் பி.ஆா்.நேரு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எச்.எல்.கிளெமோவ் நிறுவனத்தின் நிதித் துறை தலைமை அலுவலா் ஜாங்ஹுன்சோய் கலந்துகொண்டு, கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்து மாணவா்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
நிகழ்ச்சியில் எச்.எல்.கிளெமோவ் நிறுவனத்தின் மனித வள மேலாளா் சாலமோன் ஜெயகுமாா், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

காயல்பட்டினம் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு

கொணவட்டம் மாநகராட்சிப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம்

வெள்ளங்குளி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

கீழ்மாம்பட்டு அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


