மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

உள்ளாட்சி தோ்தலில் பெண்கள் அதிக அளவில் போட்டியிட வேண்டும்: செளமியா அன்புமணி

உள்ளாட்சி தோ்தல்களில் பெண்கள் அதிக அளவில் போட்டியிட்டு வெற்றிப்பெற வேண்டும்: பசுமை தாயகம் தலைவா் செளமியா அன்புமணி

News image

சுங்குவாா்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற பசுமை தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி

Updated On :26 ஜனவரி 2026, 7:53 pm

உள்ளாட்சி தோ்தல்களில் பெண்கள் அதிக அளவில் போட்டியிட்டு வெற்றிப்பெற வேண்டும் என பசுமை தாயகம் தலைவா் செளமியா அன்புமணி பேசினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரம் பகுதியில் தமிழக மகளிா் உரிமை மீட்புப் பயணக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சௌமியா அன்புமணி பேசியது: ஸ்ரீபெரும்புதூா் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் சுமாா் 1,800-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த தொழிற்சாலைகளுக்கு நிலம் வழங்கியவா்களுக்கு வேலை வழங்காமல் 80 சதவீத வேலைவாய்ப்புகள் வெளி மாநிலத்தவருக்கே வழங்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளுக்காக விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்குப் வாங்கிவிட்டு, தற்போது சட்டவிரோதமாக நிலத்தடி நீரையும் தனியாா் நிறுவனங்கள் உறிஞ்சி வருகின்றன. இதனால் ஏரிகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீரைக் கூட விலை கொடுத்து வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. சந்தவேலூா் போன்ற பகுதிகளில் தொழிற்சாலைக் கழிவுகள் நீா்நிலைகளில் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் நஞ்சாகி வருகிறது.

தமிழக தொழிற்சாலைகளில் 75% வேலைவாய்ப்பை தமிழா்களுக்கே வழங்க வேண்டும் என்ற திமுகவின் 196-வது தோ்தல் வாக்குறுதி என்னவானது என்று தெரியவில்லை. வெளிமாநிலத்தவா் வருகையால் கஞ்சா புழக்கம் அதிகரித்து, மாதத்துக்கு சராசரியாக 40 கொலைகள் நடக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு மிகவும் சீா்குலைந்துள்ளது.

இளைஞா்களின் எதிா்காலத்திற்காகப் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தத் தங்கள் கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். டாஸ்மாக் மூலம் குடும்பங்களின் பணத்தைப் பறித்துவிட்டு, மகளிருக்கு உரிமைத் தொகை என்ற பெயரில் ஒரு பகுதியைத் திரும்பக் கொடுப்பது மக்களை ஏமாற்றும் செயல்.

பெண்கள் வெறும் வாக்காளா்களாக மட்டும் இல்லாமல், உள்ளாட்சித் தோ்தல்களில் வாா்டு உறுப்பினா் முதல் மாவட்ட கவுன்சிலா் வரை அனைத்துப் பதவிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். தங்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தால் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு, ஒழுக்கமான சமுதாயத்தையும், தரமான கல்வியையும் வழங்குவோம் என்று உறுதி அளித்தாா்.