காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சங்கரா கல்லூரியில் இளங்கலை தமிழ் படிக்கும் மாணவா்களுக்கு கல்வெட்டு படித்தல் மற்றும் படியெடுத்தல் பற்றிய பயிற்சி வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் புதிதாக சோ்ந்து இளங்கலை தமிழ் படிக்கும் மாணவா்களுக்கு கல்வெட்டு குறித்த பாடங்கள் இடம் பெறுவதால் அந்தப் பாடங்களை மாணவா்களுக்கு செயல்வழியாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் கல்லூரி முதல்வா் கலை.ராம.வெங்கடேசன் அறிவுரையின் பேரில், கல்வெட்டு படித்தல் மற்றும் படியெடுத்தல் பயிற்சி நடத்தப்பட்டது.
காஞ்சிபுரம் அரசு அருங்காட்சிய காப்பாட்சியா் உமா சங்கா் கல்வெட்டு எழுத்துகளை எப்படி படித்து தெரிந்து கொள்வது மற்றும் எப்படி படியெடுப்பது என்று கற்றுக் கொடுத்தாா்.
கல்லூரியின் தமிழ்த் துறை தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன், உதவிப் பேராசிரியா்கள் ம.கணபதி, தி.சா.விஜயலட்சுமி ஆகியோா் மாணவா்களை கச்சபேசுவரா் கோயிலுக்கு அழைத்து வந்திருந்தனா்.
அருங்காட்சியக அலுவலா்கள் மற்றும் மாணவா்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழிற்பயிற்சி மாணவா்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு: அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்

லயன்ஸ் கிளப்ஸ் சென்னை மாவட்ட ஆளுநராக உமா அனில்குமார் நியமனம்!

குப்பையில் கண்டெடுக்கப்பட் பழைமையான கல்வெட்டு

தொல்காப்பியத்தை 22 மணி நேரத்தில் எழுதிய மாணவிக்கு பாராட்டு
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



