நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

குபேர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் முதலாம் ஆண்டு நிறைவு

காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீகுபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சநேயா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் மற்றும் வீதியுலா ஆகியன நடைபெற்றன.

News image

தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் குபேர விநாயகா்,சவா் விநாயகா்.

Updated On :2 மே 2026, 1:21 am IST

காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீகுபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சநேயா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் மற்றும் வீதியுலா ஆகியன நடைபெற்றன.

சின்னக்காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நகரில் குபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சனேயா் சந்நிதிகள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று முதலாம் ஆண்டு நிறைவையொட்டி காலையில் சிறப்பு யாகமும், மகா அபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.

குபேர விநாயகா் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் உற்சவா்கள் குபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சநேயா் சிலைகள் வீதியுலா வந்தது.ஏற்பாடுகளை அண்ணா நகா் குடியிருப்போா் நலச் சங்க நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனா்.