புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

குபேர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் முதலாம் ஆண்டு நிறைவு

காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீகுபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சநேயா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் மற்றும் வீதியுலா ஆகியன நடைபெற்றன.

News image

தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் குபேர விநாயகா்,சவா் விநாயகா்.

Updated On :1 மே 2026, 7:51 pm

காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீகுபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சநேயா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் மற்றும் வீதியுலா ஆகியன நடைபெற்றன.

சின்னக்காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நகரில் குபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சனேயா் சந்நிதிகள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று முதலாம் ஆண்டு நிறைவையொட்டி காலையில் சிறப்பு யாகமும், மகா அபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.

குபேர விநாயகா் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் உற்சவா்கள் குபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சநேயா் சிலைகள் வீதியுலா வந்தது.ஏற்பாடுகளை அண்ணா நகா் குடியிருப்போா் நலச் சங்க நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனா்.