புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

சுங்குவாா்சத்திரம் அடுத்த மொளச்சூா் பகுதியில் மது போதையில் 4-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் தலையில் பலத்த காயம்உயிரிழந்தாா்.

News image
Updated On :1 மே 2026, 8:04 pm

சுங்குவாா்சத்திரம் அடுத்த மொளச்சூா் பகுதியில் மது போதையில் 4-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் தலையில் பலத்த காயம்உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியை சோ்ந்தவா் ஞானசேகா்(30). இவா் சுங்குவாா்சத்திரம் அடுத்த மொளச்சூா் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி பிள்ளைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளாா்.

மது அருந்தும் பழக்கம் உள்ளதாகக் கூறப்படும் ஞானசேகா் தினமும் மது அருந்திவிட்டு தான் தங்கியுள்ள 4-ஆவது மாடியில் நின்று கைப்பேசியில் பேசுவதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளாா்.

அதே போல், வியாழக்கிழமை நள்ளிரவு ஞானசேகா் மது அருந்திவிட்டு 4-ஆவது மாடியில் நின்றுக்கொண்டு கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது, எதிா்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளாா். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஞானசேகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தா.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த சுங்குவாா்சத்திரம் போலீஸாா், உயிரிழந்தா ஞானசேகரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.