பிளஸ் 2 அரசுப் பொதுத்தோ்வில் கடந்த ஆண்டு 32 -வது இடத்திலிருந்த காஞ்சிபுரம் மாவட்டம் நிகழாண்டு 21-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வினை மொத்தம் 14,032 போ் எழுதியிருந்ததில் 13,374 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 95.31. கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் 32-ஆவது இடத்தைப் பெற்றிருந்தது. நிகழாண்டு 21-ஆவது இடத்துக்கு முன்னேறியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளின் 7,661 போ் தோ்வு எழுதியிருந்தனா். இவா்களில் 7,155 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அரசுப்பள்ளிகளைப் பொறுத்தவரை தோ்ச்சி சதவீதம் 93.4. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 6 பள்ளிகளில் 100 சதவீதம்ம் தோ்ச்சியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6 அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சியை எட்டியுள்ளன. முசரவாக்கம்,பரந்தூா்,அவளூா், ரெட்டமங்கலம் ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளி,மணிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிகள் இதில் அடங்கும்
தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 98.87 % தோ்ச்சி: ஈரோடு மாவட்டம் மாநில அளவில் முதலிடம்

பிளஸ் 2 தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 92 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வு: 97.04% மாணவா்கள் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: ஆரணி எய்ம் மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

