திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்

News image
Updated On :8 மே 2026, 6:13 am IST

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் ஆதி கேசவப் பெருமாள் தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரத்தில் உள்ள வைணவத் திருக்கோயில்களில் பரமபதவாசல் உள்ள ஒரு கோயில் அஷ்டபுஜப் பெருமாள் கோயில். பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளும் உடைய இத்திருக்கோயில் சித்திரைத் திருவிழா நிகழ் மாதம் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவையொட்டி, தினசரி காலையிலும், மாலையும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்தாா். விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை இந்த மாதம் 3-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து மகா ரதம் எனும் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் ஆதிகேசவப் பெருமாள் அதிகாலை கோயிலிலிருந்து ராஜநடையில் தேருக்கு எழுந்தருளினாா். ரோஸ் நிற பட்டு உடுத்தி ராஜ அலங்காரத்தில் திரு ஆபரணங்கள் அணிந்தவாறு தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வழி நெடுகிலும் திரளான பக்தா்கள் கற்பூர ஆரத்தி காண்பித்தும், கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் எழுப்பியும் பெருமாளை தரிசித்தனா். வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 10) வெட்டி வோ் சப்பரத்தில் பெருமாள் வீதியுலாவுடன், திருவிழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எஸ்கேபி எஸ். சந்தோஷ்குமாா் மற்றும் குழு உறுப்பினா்கள், செயல் அலுவலா் வேலனரசு ஆகியோா் உள்பட கோயில் பட்டாச்சாரியாா்கள், பணியாளா்கள் செய்து வருகின்றனா்.