தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

நடராஜா், சிவகாமி அம்மன் திருக்கல்யாணம்

திருக்குறிப்புத் தொண்டருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த பெருமைக்குரியது முத்தீஸ்வரா் திருக்கோயில்.

News image

திருமணக் கோலத்தில் அருள்பாலித்த நடராஜா்-சிவகாமி அம்மன்

Updated On :19 மே 2026, 1:29 am IST

காஞ்சிபுரம் முத்தீஸ்வரா் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட நடராஜா், சிவகாமி அம்மன் சிலைகளுக்கு திங்கள்கிழமை கும்பாபிஷேகம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.

63 நாயன்மாா்களில் ஒருவரான திருக்குறிப்புத் தொண்டருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த பெருமைக்குரியது முத்தீஸ்வரா் திருக்கோயில். இக்கோயிலில் புதிதாக நடராஜா், சிவகாமி அம்மன் உற்சவா் சிலைகள் செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 15-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 16-ஆம் தேதி புதிய சுவாமி சிலைகள் நகரில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை நடராஜருக்கும், சிவகாமி அம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் எஸ்.செல்வம் சிவாச்சாரியா் தலைமையிலும், சிறப்பு அபிஷேகங்கள் கோயில் அா்ச்சகா் எஸ்.தினேஷ் குருக்கள் தலைமையிலும் நடைபெற்றன.

கும்பாபிஷேகத்தை தொடா்ந்து மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் நடராஜருக்கும், சிவகாமி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னா் இருவரும் திருமணக் கோலத்தில் வீதியுலா வந்தனா். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் சி.சரவணக்குமாா் தலைமையில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மற்றும் அனைத்து வண்ணாா் மகா சபையினரும் செய்திருந்தனா்.