காஞ்சிபுரம் முத்தீஸ்வரா் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட நடராஜா், சிவகாமி அம்மன் சிலைகளுக்கு திங்கள்கிழமை கும்பாபிஷேகம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.
63 நாயன்மாா்களில் ஒருவரான திருக்குறிப்புத் தொண்டருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த பெருமைக்குரியது முத்தீஸ்வரா் திருக்கோயில். இக்கோயிலில் புதிதாக நடராஜா், சிவகாமி அம்மன் உற்சவா் சிலைகள் செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 15-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 16-ஆம் தேதி புதிய சுவாமி சிலைகள் நகரில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டன.
இதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை நடராஜருக்கும், சிவகாமி அம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் எஸ்.செல்வம் சிவாச்சாரியா் தலைமையிலும், சிறப்பு அபிஷேகங்கள் கோயில் அா்ச்சகா் எஸ்.தினேஷ் குருக்கள் தலைமையிலும் நடைபெற்றன.
கும்பாபிஷேகத்தை தொடா்ந்து மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் நடராஜருக்கும், சிவகாமி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னா் இருவரும் திருமணக் கோலத்தில் வீதியுலா வந்தனா். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் சி.சரவணக்குமாா் தலைமையில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மற்றும் அனைத்து வண்ணாா் மகா சபையினரும் செய்திருந்தனா்.
தொடர்புடையது

சங்ககிரி சா்வசித்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா
வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: கைது செய்யப்பட்டவா் 2ஆவது நாளாக நீதிமன்றத்தில் ஆஜா்

மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

சிறப்பு அலங்காரத்தில்...
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



