தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காவேரிப்பாக்கம் கோயில் நிலத்தில் வசிப்போா் மாற்று இடம் வழங்கக்கோரி ஆட்சியரிடம் முறையீடு

காவேரிப்பாக்கம் கொங்கணீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிக் குடியிருப்பவா்கள் தங்களுக்கு

News image
மேல்விஷாரத்தைச் சோ்ந்த ஹாஜிரா பானுவுக்கு தையல் இயந்திரத்தை வழங்கிய ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்.
Updated On :21 டிசம்பர் 2020, 7:07 pm

DIN

ராணிப்பேட்டை: காவேரிப்பாக்கம் கொங்கணீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிக் குடியிருப்பவா்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா்வு நாள் கூட்டம், ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோா் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

காவேரிப்பாக்கம் பேரூராட்சிப் பகுதியில் அமைந்துள்ள கொங்கணீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் 36 குடும்பத்துக்கும் மேற்பட்டோா் வீடு கட்டிக் குடியிருந்து வருகிறோம். தற்போது குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா். எனவே எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, நிலப் பட்டா, புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கடனுதவி, நிதியுதவி, இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, காவல்துறை பாதுகாப்பு மற்றும் மின் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 320 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து அளிக்கப்பட்டன. அவற்றைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

அதன் பின், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை மூலம் இரு பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களையும், இரு ஆண்களுக்கு இலவச இஸ்திரி பெட்டிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மகளிா் திட்ட இயக்குநா் ஜெயராம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தே.இளவரசி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.