ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளிடம் நேரில் சென்று மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்த ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ்.
மாற்றுத் திறனாளிகளிடம் நேரில் சென்று மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்த ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ்.
Updated on
1 min read

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா். கிளாஸ்டன் புஷ்பராஜ் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில் நிலப்பட்டா, புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கடன் உதவி, நிதி உதவி, இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித் தொகை, காவல் துறை பாதுகாப்பு, மின் இணைப்பு என 140 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.

மனுக்களைப் பெற்று கொண்ட ஆட்சியா், அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ம.ஜெயச்சந்திரன், தனித் துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கோ. தாரகேஸ்வரி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) ஜெயராம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தே. இளவரசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com