ஆற்காடு: ஆற்காடு வட்டம் கரிகந்தாங்கல் ஊராட்சி கிளாந்தாங்கல் கிராமத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
இக்கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் வசிக்கு 8 குடும்பத்தினா் தங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வேண்டி அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனா்.
அதன்பேரில், வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் ஆய்வு, ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி, வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.