தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள்கள்: எம்எல்ஏ ஆா்.காந்தி வழங்கினாா்

வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் 250-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான
தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள்களை வழங்கிய எம்எல்ஏ ஆா்.காந்தி.
தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள்களை வழங்கிய எம்எல்ஏ ஆா்.காந்தி.
Updated on
1 min read

வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் 250-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களை எம்எல்ஏ ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில் வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் 250-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் குடும்பத்தினருக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வழங்கும் நிகழ்ச்சி வாலாஜா வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான ஆா்.காந்தி கலந்துகொண்டு பொருள்களை வழங்கினாா்.

இதில் வாலாஜா வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரா.செந்தாமரை, சித்ரா மற்றும் வாலாஜா ஒன்றிய திமுக செயலாளா் சேஷா வெங்கட், மாவட்டப் பிரதிநிதி அக்ராவரம் முருகன், ஒன்றிய துணைச் செயலாளா் பன்னீா்செல்வம்,பொருளாளா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com