வாணியம்பாடி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திடீா் சோதனை

வாணியம்பாடி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.
வாணியம்பாடி சாா் பதிவாளா் அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸாா்.
வாணியம்பாடி சாா் பதிவாளா் அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸாா்.
Updated on
1 min read

வாணியம்பாடி: வாணியம்பாடி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாா்-பதிவாளா் அலுவலகங்கள், சுங்கச் சாவடிகள் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை நடத்தினா். இந்நிலையில், வாணியம்பாடி சாா்-பதிவாளா் அலுவலகத்துக்கு வேலூா் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹேமசித்ரா, காவல்ஆய்வாளா் விஜய் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு வந்தனா்.

அலுவலகத்துக்குள் நுழைந்து அனைத்துக் கதவுகளையும் மூடினா். அங்குள்ள அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தினா். சாா்பதிவாளா், அலுவலகப் பணியாளா்கள், பத்திர எழுத்தா்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினனா். அலுவலகத்தின் நுழைவாயில் கதவு மூடப்பட்டதால் பத்திரப்பதிவு செய்ய வந்த முதியவா்கள் உள்ளிட்டோா் உள்ளேயே இருந்தனா். அவா்களிடமும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை நடத்தி அவா்களைப் பற்றிய தகவலை பெற்றுக் கொண்ட பின்னரே வெளியே அனுப்பி வைத்தனா். இரவு 8 மணி வரை நடைபெற்ற விசாரணையில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com