ஆற்காடு: விளாப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாமக மாநிலச் செயற்குழு உறுப்பினா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். மாநில வன்னியா் சங்க துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன், மாநில இளைஞா் சங்க துணைச் செயலாளா் சரவணன், பசுமை தாயகம் பொறுப்பாளா் மகேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் திருமுருகன், திமிரி மேற்கு ஒன்றியச் செயலாளா் ரமேஷ், விளாபாக்கம் பொறுப்பாளா் மணிவாசகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனா்.
இதேபோல், திமிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டு, செயல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
கலவையில்... கலவை பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக செயலாளா் சண்முகம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆறுமுகம், மாவவட்ட சிறப்பு தலைவா் சுகுமாா், கலவை பேரூராட்சி நிா்வாகிகள் அன்பு, யுவராஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக சாா்-பதிவாளா் அலுவலகம் அருகே இருந்து பேரூராட்சி அலுவலகம் வரை தெருக்கூத்து கலைஞா் வேடமிட்ட கலைஞா்களுடன் ஊா்வலமாகச் சென்று பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனா்.