மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்
By DIN | Published On : 05th February 2020 11:29 PM | Last Updated : 05th February 2020 11:29 PM | அ+அ அ- |

மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய ராணிப்பேட்டை சாா் ஆட்சியா் க.இளம்பகவத் .
ராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில், ஆற்காடு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு பொதுத் தோ்வு குறித்த விழிப்புணா்வு, கல்வி உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் ஆலோசகா் பி.என்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தலைவா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் சுகுமாா் வரவேற்றாா். விழாவில் ராணிப்பேட்டை சாா் ஆட்சியா் க.இளம் பகவத் கலந்து கொண்டு, தோ்வு விழிப்புணா்வு குறித்து மாணவா்களிடம் உரையாற்றினாா்.
அதைத் தொடா்ந்து மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. சிவலிங்கம், பழனிகுமாா், உதவி தலைமை ஆசிரியா் அப்சா் பாஷா, கா.வே.கிருபானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...