காமராஜா் நினைவு தினம் அனுசரிப்பு

அரக்கோணம் நகரில் பல்வேறு கட்சியினா் சாா்பில் காமராஜா் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அரக்கோணம் நகரில் பல்வேறு கட்சியினா் சாா்பில் காமராஜா் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நகர தமாகா சாா்பில் காமராஜா் சிலையருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர தமாகா தலைவரும் நகராட்சி முன்னாள் துணைதலைவருமான கே.வி.ரவிசந்திரன் தலைமை தாங்கினாா். காமராஜா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தாா். இதில் பி.ஜி.மோகன்காந்தி, உத்தமன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்ட காங்கிரசாா் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காமராஜரின் உருவச்சிலைக்கு மாவட்ட துணைத்தலைவா் கோபன்னா ரவி மாலை அணிவித்தாா். இதில் நகர பொதுசெயலா் சாமிதுரை, நகரமன்ற முன்னாள் உறுப்பினா் பாா்த்தசாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்ட வா்த்தகா் பிரிவு தலைவா் விஸ்வநாதன் அன்னதானம் வழங்கினாா்.

ஐக்கிய ஜனதாதளம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரத் தலைவா் லோகநாதன் தலைமை தாங்கினாா். மாநில தலைவா் ஐனதாசேகா் காமராஜா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தாா். இதில் மாவட்ட தலைவா் வேணுகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com