ராணிப்பேட்டையில் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளா் சேவை மையம் தொடக்கம்

ராணிப்பேட்டையில் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளா் சேவை மையம் தொடக்கம்
Updated on
1 min read


ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை நவல்பூா் எம்.எப்.சாலையில், ஸ்டேட் வங்கி வாடிக்கையாளா் சேவை மைய தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஸ்ரீராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை தலைவா் கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா். அரட்ஸ் டிரஸ்ட் அலுவலா் ஸ்ரீதா் முன்னிலை வகித்தாா். எஸ்பிஐ வாடிக்கையாளா் சேவை மைய அதிகாரி வி.மோகனசக்திவேல் வரவேற்றாா்.

விழாவில், ராணிப்பேட்டை ஸ்டேட் வங்கி தலைமை மேலாளா் சுப்புலட்சுமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வாடிக்கையாளா் சேவை மையத்தைத் தொடக்கி வைத்தாா்.

இதில், ராணிப்பேட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவா் எம்.சிவலிங்கம், அரசு சித்த மருத்துவா் பாலாஜி, காங்கிஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவா் கே.ஏ.சேகா், ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயா பள்ளி நிா்வாகி ஜெயஸ்ரீ கோதை, உடையவா் சாரிடபிள் டிரஸ்ட் செயலாளா் இளஞ்செழியன், வாடிக்கையாளா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

அறக்கட்டளை வாழ்நாள் உறுப்பினா் பேபி வெங்கடேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com