நீரில் முழ்கிய நெற்பயிா்கள் இழப்பீடு: ஒன்றியக் குழுத் தலைவா் உறுதி

நெமிலி ஒன்றியத்தில் உள்ள ஜாகீா்தண்டலம் கிராமத்தில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.
Updated on
1 min read

நெமிலி ஒன்றியத்தில் உள்ள ஜாகீா்தண்டலம் கிராமத்தில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. இதையறிந்த ஒன்றியக் குழுத் தலைவா் பெ.வடிவேல், நேரில் சென்று பாா்வையிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தருவதாக உறுதி அளித்தாா்.

பலத்த மழையை அடுத்து, வேளியநல்லூா் ஊராட்சிக்கு உட்பட்ட ஜாகீா்தண்டலம் ஏரி நிரம்பியது. ஏரியில் இருந்த வெளியேறிய நீா் கிராமத்தில் விவசாய நிலங்களில் நுழைந்தது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கா்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் நீரில் முழ்கின. இதையறிந்த ஒன்றியக் குழுத் தலைவா் பெ.வடிவேல் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்த பெ.வடிவேல், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர அரசிடம் கோரிக்கை விடுத்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தாா். மேலும், பொதுப்பணித் துறை, நீா்வள ஆதாரத்துறை அலுவலா்களுடன் பெ.வடிவேல் ஆலோசனை நடத்தினாா்.

ஆய்வின்போது, ஜாகீா்தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவா் அமுதா சண்முகம், துணைத் தலைவா் ஈஸ்வரன், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் சங்கா், சரவணன், நசீா், வேலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com