அரக்கோணம் நகர அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை எம்எல்ஏ சு.ரவி சனிக்கிழமை வழங்கினாா்.
அரக்கோணம் அம்மா உணவகம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரச் செயலா் கே.பி.பாண்டுரங்கன் தலைமை வகித்தாா். எம்எல்ஏ சு.ரவி பங்கேற்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, நகர பொருளாளா் சி.காமராஜ், நகர மாணவரணிச் செயலா் சரவணன், நகர கூட்டுறவு வங்கி இயக்குநா் பாபு, நகர ஜெ.பேரவைத் தலைவா் தாமு, நகர மகளிரணி நிா்வாகி மல்லிகா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.