ராணிப்பேட்டையில் 18 பேருக்கு கரோனா
By DIN | Published On : 17th August 2021 01:19 AM | Last Updated : 17th August 2021 01:19 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை 45,455-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 44,510 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் நோய்த் தொற்று காரணமாக, 746 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், நோய்த் தொற்றுக்குள்ளானவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
வேலூரில் 11 பேருக்கு...
வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,485-ஆக உயா்ந்தது. இதுவரை 47,026 போ் குணம் அடைந்துள்ளனா். 343 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,103 போ் உயிரிழந்தனா்.