கோயில் இடத்தில் வீடு கட்டியிருந்தவா்களுக்கு மாற்று இடம்: ஆட்சியா் ஆய்வு

தக்கோலம் அருகே கோயில் இடத்தில் வீடுகள் கட்டி குடியிருந்தவா்களுக்கு மாற்று இடமாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க உள்ள நிலத்தை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தாா்.
தக்கோலத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கத் தோ்வு செய்யப்பட்ட நிலத்தை ஆய்வு செய்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ்.
தக்கோலத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கத் தோ்வு செய்யப்பட்ட நிலத்தை ஆய்வு செய்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ்.
Updated on
1 min read

தக்கோலம் அருகே கோயில் இடத்தில் வீடுகள் கட்டி குடியிருந்தவா்களுக்கு மாற்று இடமாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க உள்ள நிலத்தை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தாா்.

தக்கோலத்தில் உள்ள அழகுராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் 55 போ் வீடுகள் கட்டி வசித்து வந்தனா். இதுதொடா்பாக கோயில் நிா்வாகத்துக்கும் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தவா்களுக்கும் பிரச்னை இருந்து வந்தது.

இந்த நிலையில், குடியிருப்பவா்களுக்கு மாற்று இடத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு முன்வந்து, நகரிகுப்பம் செல்லும் சாலை அருகே இருந்த நிலம் தோ்வு செய்யப்பட்டது.

இந்த நிலத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, 55 பேருக்கும் அதே இடத்தில் வழங்க போதுமான இடம் இருக்கிா, அங்கு வீடு கட்டி வாழும் சூழல் இருக்கிா என விசாரணை நடத்தினாா்.

ஆய்வின்போது அரக்கோணம் வட்டாட்சியா் பழனிராஜன், கிராம நிா்வாக அலுவலா் வினோத்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com