மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 20th August 2021 08:01 AM | Last Updated : 20th August 2021 08:01 AM | அ+அ அ- |

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:
ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி, மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பி.சி., எம்.பி.சி., மாணவ, மாணவிகள் 2021 - 22 -ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ 2 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவருக்கு, ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை உதவித் தொகை வழங்கப்படும்.
தகுதியான மாணவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா்களை அணுகி விவரம் அறியலாம்.
மாணவா்கள் உரிய விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தைப் பரிந்துரை செய்து, நவ. 30-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி - இயக்குநா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், இரண்டாவது தளம், சேப்பாக்கம், சென்னை-5. தொலைபேசி எண் - 044 - 28551462, மின்னஞ்சல் முகவரி, முகவரியிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...