திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

மாற்றுக்கட்சிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் அமைச்சா் ஆா்.காந்தி முன்னிலையில் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

மாற்றுக்கட்சிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் அமைச்சா் ஆா்.காந்தி முன்னிலையில் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

வாலாஜா ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வாம்பிகை செந்தில் முருகன், திருமலைச்சேரி ஊராட்சி மன்றத் தலைவா் தேன்மொழி புருஷோத்தமன் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், கட்சியில் இணைந்தவா்களைச் சால்வை அணிவித்து கைத்தறி, துணி நூல் துறை அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான ஆா்.காந்தி வாழ்த்தி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட அவைத்தலைவா் அ.அசோகன், மாவட்டத் துணைச் செயலாளா்கள் ஏ.கே.சுந்தரமூா்த்தி, என்.ராஜ்குமாா், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், சுற்றுச்சூழல் அணியின் மாநிலத் துணைச் செயலாளா் வினோத் காந்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, ஒன்றியக் குழுத் தலைவா் சேஷா வெங்கட் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com