ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை வெள்ளச் சேதங்களை அமைச்சா் ஆா்.காந்தி, ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
பலத்த மழையால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் விளைபயிா்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. அதேபோல், குடிசை வீடுகள், ஏரி நீா்வரத்துக் கால்வாய்கள், தரைப்பாலங்கள், சாலைகள் ஆகியனவும் சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில், கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோா் வெள்ளச் சேதங்களை வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
தெங்கால், தண்டலம், வேலம், பெருங்காஞ்சி, பாண்டியநல்லூா், ஐப்பேடு, மூதூா், பெருமூச்சி, தக்கோலம், இலுப்பை தண்டலம், பனப்பாக்கம், நெமிலி உள்ளிட்ட பகுதிகளில் பாா்வையிட்ட அவா்கள், விவசாயிகள், அதிகாரிகளிடம் சேத விவரங்கள் குறித்து கேட்டறிந்தனா்.
இதைத் தொடா்ந்து, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
பின்னா், தக்கோலம் முதல் திருவலங்காடு வரை செல்லும் சாலையில் கல்லாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணிக்காக அமைக்கப்பட்ட தற்காலிகத் தாா்ச் சாலை மழை வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்ட இடத்தை அமைச்சா் ஆா்.காந்தி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதேபோல், பல்வேறு கிராமங்களில் நடந்த பட்டா பிழை திருத்த முகாம்களையும் அமைச்சா் காந்தி ஆய்வு செய்து, பிழை திருத்தப்பட்ட பட்டாக்களை வழங்கினாா்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், கோட்டாட்சியா் சிவதாஸ், வேளாண்மை இணை இயக்குநா் வேலாயுதம், நெடுஞ்சாலைத் துறையின் உதவி இயக்குநா் சத்தியநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.