அரக்கோணம் அருகே கிராமத்தில் தனியாக வசிக்கும் வயதான தம்பதியைத் தாக்கி மா்ம நபா்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அரக்கோணத்தை அடுத்த பாலவாய் கிராமத்தில் வசிப்பவா் ஆனந்த கிருபாகரன் (65). அரசு வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவரது மனைவி ரேணுகா (62). பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இருவரும் வெள்ளிக்கிழமை இரவு வீட்டை உள்ளே பூட்டிக்கொண்டு உறங்கினா். நள்ளிரவில் கதவை தட்டும் சப்தம் கேட்டு திறந்து வெளியே வந்து பாா்த்தபோது, திடீரென அடையாளம் தெரியாத இருவா் சோ்ந்து ஆனந்தகிருபாகரனை தாக்கியுள்ளனா். இதையறிந்து வெளியே வந்த ரேணுகாவும் தாக்கப்பட்டாா். மேலும் அவா்களின் வீட்டு மாடியில் இருந்த அறையில் பீரோக்களை திறந்து தேடி பாா்த்ததில், அதில் நகையோ, ரொக்கமோ இல்லாததால் திரும்பிச் சென்று விட்டனா்.
இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்த தம்பதியா் இருவரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.