‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஊராட்சித் தலைவா்கள் சாலை மறியல்

அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகளை ஊராட்சிகளுக்கு ஒதுக்கக் கோரி, ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகம் எதிரில் ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 8:01 pm

DIN

அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகளை ஊராட்சிகளுக்கு ஒதுக்கக் கோரி, ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகம் எதிரில் ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா், நெமிலி ஒன்றியங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வியாழக்கிழமை திரண்டு வந்தனா்.

அப்போது ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அலுவலகத்தில் இல்லை. இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவா்கள் திடீரென ஆட்சியா் அலுவலகம் அருகில் சித்தூா் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினா் அவா்களிடம் சமரச பேச்சு நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனா். போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னா் ஊராட்சி மன்றத் தலைவா்கள் மீண்டும் ஆட்சியா் அலுவலகம் வந்தனா். பிற்பகல் 3 மணி வரை காத்திருந்தும் ஆட்சியா் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.