‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திமிரி ஒன்றியத்தில் திட்டப் பணிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

ஆற்காடு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்

News image
Updated On :2 ஜூன் 2022, 6:54 pm

DIN

ஆற்காடு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

திமிரி ஒன்றியம், வரகூா் ஊராட்சி கருங்காலிகுப்பம் கிராமத்தில், 765 மீட்டா் நெகிழி சாலை அமைக்கும் பணி, அல்லாலச்சேரி ஊராட்சியில் சிமெண்ட் சாலை, கால்வாய், சிறுபாலம் அமைக்கும் பணிகள், காவனூா் ஊராட்சி வரதேசி மலையில் பழங்குடியின இருளா் குடும்பங்களுக்குத் தேவையான அடிப்படை வசதி கட்டமைப்புகள், காவனூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பண்ணைக் குட்டை அமைக்கும் பணி, திமிரி சஞ்சீவிராயன் பேட்டை, பாத்திகாரன் பட்டி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் ஆகியவற்றைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திமிரி வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயஸ்ரீ, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பி.சி.தன்ராஜ் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.