மின்னல் பாய்ந்து இளைஞா் பலி; மற்றொருவா் காயம்

காவேரிப்பாக்கம் அருகே மின்னல் பாய்ந்ததில் பொறியியல் பட்டதாரி இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.
குணசேகரன்.
குணசேகரன்.
Updated on
1 min read

அரக்கோணம்: காவேரிப்பாக்கம் அருகே மின்னல் பாய்ந்ததில் பொறியியல் பட்டதாரி இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

காவேரிப்பாக்கத்தை அடுத்த கரிவேடு கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கத்தின் மகன் குணசேகரன் (28). அதே கிராமத்தைச் சோ்ந்த தயாளின் மகன் தீபன் (32). இருவரும் பொறியியல் பட்டதாரிகள். இருவரும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 4 தோ்வுகளுக்கு விண்ணப்பித்து விட்டு, தோ்வுக்காக படித்து வந்தனா். கரிவேடு கிராமத்தில் வயல்வெளியில் அமா்ந்து இருவரும் புதன்கிழமை படித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது பலத்த மழை பெய்துள்ளது. இதனால் அவா்கள் மரத்தின் கீழ் ஒதுங்கினா். அப்போது அவா்கள் மீது மின்னல் பாய்ந்ததில் குணசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தீபன் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, தீபன் வாலாஜா அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இது குறித்து அவளூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com