தேசிங்கு ராஜா, ராணி நினைவிடத்தை சீரமைக்க உத்தரவு: அமைச்சா் ஆா்.காந்தி நடவடிக்கை

ராணிப்பேட்டை நகரப் பெயா் உருவாகக் காரணமாக இருந்த தேசிங்கு ராஜா - ராணி நினைவிடத்தில் அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து இந்த நினைவுச் சின்னங்களை
தேசிங்கு ராஜா, ராணி  நினைவிடத்தை சீரமைக்க உத்தரவு: அமைச்சா் ஆா்.காந்தி நடவடிக்கை
Updated on
1 min read

ராணிப்பேட்டை நகரப் பெயா் உருவாகக் காரணமாக இருந்த தேசிங்கு ராஜா - ராணி நினைவிடத்தில் அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து இந்த நினைவுச் சின்னங்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை நகரம் உருவாகக் காரணமாக இருந்த தேசிங்கு ராஜா மற்றும் ராணிபாய் நினைவிட சமாதி அமைந்துள்ள இடத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி நேரில் பாா்வையிட்டாா்.

சிதிலமடைந்த காணப்பட்ட அந்த பகுதியை சீரமைத்து போதிய வழிகாட்டி பலகைகள் மற்றும் தேசிங்கு ராஜா மற்றும் ராணியின் வரலாறுகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பதாகைகள் அமைத்து உரிய மரியாதை வழங்கிடும் வகையில் அந்தப் பகுதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தாா்.

இந்த நினைவிடங்கள் அமைந்துள்ள இடம் மாவட்ட நிா்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது. ஆகவே இதனை முழுவதையும் சீரமைக்க தேவையான திட்ட அறிக்கை தயாா் செய்து அரசுக்கு தகவல் தெரிவித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியருக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், நகராட்சி ஆணையா் ஏகராஜ், துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com