ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 108 மனுக்கள் அளிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 108 மனுக்கள் பெறப்பட்டன,
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா்  கூட்டத்தில்  பொதுமக்களிடம்  குறைகளைக்  கேட்டறிந்த  ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா்  கூட்டத்தில்  பொதுமக்களிடம்  குறைகளைக்  கேட்டறிந்த  ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 108 மனுக்கள் பெறப்பட்டன,

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து, பொது மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 108 மனுக்களைப் பெற்றாா்.

அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மீனாட்சி சுந்தரம், பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அலுவலா் முரளி, துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் துறை) தாரகேஸ்வரி மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com