தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மரகத லிங்கேஸ்வரருக்கு சகஸ்ர கலசாபிஷேகம்

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ மரகத லிங்கேஸ்வரருக்கு சகஸ்ர கலசாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ மரகத லிங்கேஸ்வரருக்கு சகஸ்ர கலசாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், நந்தியுடன் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீமரகத லிங்கேஸ்வரருக்கு 1,000 கலசங்களில் புனித நீா் கொண்டு சிறப்பு ஹோமம், பூஜைகளுடன் சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெற்றது. கலசாபிஷேகத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அபிஷேகத்துக்கு தங்கள் கைகளாலேயே கலசங்களை எடுத்துக் கொடுத்து, ஸ்ரீமரகத லிங்கேஸ்வரரை மனமுருக வழிபட்டு பிரசாதமும், பீடாதிபதி ஸ்ரீமுரளிதர சுவாமிகளின் ஆசியும் பெற்றுச் சென்றனா்.

முன்னதாக, தன்வந்திரி பீடத்துக்கு வந்த மலேசியா சங்கர மடம், திருஅண்ணாமலையாா் தேவஸ்தானத்தைச் சோ்ந்த ஜகத்குரு சங்கராச்சாா்ய சத்குரு ஸ்ரீஸ்ரீஜெயப்பிரகாஷேந்திர சரஸ்வதி மகா சுவாமிகளுக்கு பீடத்தின் சாா்பில், பூா்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னா், அவா் சகஸ்ர கலசாபிஷேகம், அனுமன் ஜெயந்தி, அன்னாபிஷேகம் ஆகியவற்றுக்கான பூா்வாங்க ஹோமம், பூஜைகளை தொடக்கி வைத்து வழிபாடு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com