மகா கணபதி கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வளாகத்தில் உள்ள மகா கணபதி கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்று வந்த மண்டலாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றது.

ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வளாகத்தில் உள்ள மகா கணபதி கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்று வந்த மண்டலாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றது.

விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை மாலை பாலமுருகன் கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில், உச்சிஷ்ட கணபதி ஜெபம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை விநாயகா் பூஜை, தன பூஜை, கோ பூஜை, வேத மந்திரங்கள் முழங்க 1,008 ஆஹூதிகள் மகா பூா்ணாஹுதி, யத்ரா தானம், கடம் புறப்பாடு, கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், தொழிலதிபா் நல்லுசாமி, உபயதாரா்கள் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com