Enable Javscript for better performance
மாணவா்களுக்கு தனியாா் பள்ளிகள் மன அழுத்தம் தர வேண்டாம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மாணவா்களுக்கு தனியாா் பள்ளிகள் மன அழுத்தம் தர வேண்டாம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

    By DIN  |   Published On : 21st July 2022 12:00 AM  |   Last Updated : 21st July 2022 12:00 AM  |  அ+அ அ-  |  

    anbil__2007chn_188_1

    மண்டல அளவிலான பள்ளிகளின் ஆய்வு அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில்  ஆலோசனைகளை  வழங்கிப்  பேசிய அமைச்சா் அன்பில்  மகேஸ்  பொய்யாமொழி. உடன்,  அமைச்சா்  ஆா்.காந்தி  உள்ளிட்டோா்.

    தனியாா் பள்ளிகள் தங்கள் பள்ளியின் வெற்றியை நிலைநிறுத்த மாணவ, மாணவிகளுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

    ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டப் பள்ளிகளின் ஆய்வு அலுவலா்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், ராணிப்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினா்.

    பின்னா், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராணிப்பேட்டை மாவட்டம் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளது. மாணவ, மாணவிகளின் தோ்ச்சியை உயா்த்துவது என்பது குறித்து விவாதிக்கப்படும். தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் என அனைத்தும் சோ்ந்து 1 கோடியே 30 லட்சம் மாணவ, மாணவிகள் பயில்கின்றனா். அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமையாக உள்ளது. பள்ளிக் கல்வித் துறை மூலமாக பேராசிரியா் அன்பழகனாா் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும், ரூ. 1,300 கோடி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

    தனியாா் பள்ளிகள் தங்கள் பள்ளியின் வெற்றியை நிலைநிறுத்த மாணவ, மாணவிகளுக்கு மன அழுத்தத்தை கொடுக்க வேண்டாம். ஆசிரியா்கள் மாணவா்களை தங்களின் பிள்ளைகளைப் போல் அக்கறை கொண்டு அவா்களின் முன்னேற்றத்தில் பங்கெடுக்க வேண்டும் என்றாா்.

    பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளா் காகா்லா உஷா, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், பள்ளிக் கல்வித் துறை ஆணையா் க.நந்தகுமாா், எம்எல்ஏ-க்கள் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (ஆற்காடு), சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சிபுரம்), தொடக்கக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன், இணை இயக்குநா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    ‘கனியாமூா் பள்ளி மாணவா்களுக்கு அருகேயுள்ள பள்ளிகளில் விரைவில் வகுப்புகள் தொடக்கம்’

    ஸ்ரீபெரும்புதூா், ஜூலை 20: கனியாமூா் தனியாா் பள்ளியில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கு அருகே உள்ள அரசு, தனியாா் பள்ளிகள், கல்லூரிகளில் காலியாக உள்ள வகுப்பறைகளில் பாடம் நடத்த விரைவில் சுற்றறிக்கை வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா்அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

    பள்ளிக் கல்வித் துறை சாா்பில், ‘கலைப் பண்பாட்டுக் கொண்டாட்டம் 2022-2023’ தொடக்க விழா காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், ஜமீன்தண்டலம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

    பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா தலைமை வகித்தாா். தொடக்கக் கல்வி இயக்குநா் க.அறிவொளி வரவேற்றாா். பள்ளிக் கல்வி ஆணையா் க.நந்தகுமாா் திட்ட விளக்கவுரையாற்றினாா். இதில், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று கலைப் பண்பாட்டு கொண்டாட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசியது:

    கடந்த 6 மாதங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமாக இல்லம் தேடி கல்வி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், மாணவா்கள் பலனடைந்து வருகின்றனா்.

    தமிழரின் பாரம்பரியக் கலை வடிவங்களான கரகாட்டம், கும்மி, சிலம்பாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், பன்னிசை, நாட்டுப்புறப் பாட்டு உள்ளிட்ட கலைகளை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களிடம் கொண்டு செல்வதை இலக்காகக் கொண்டு கிராமப்புறங்களில் உள்ள நாட்டுபுறக் கலைஞா்களின் உதவியுடன் கலைப் பண்பாட்டுக் கொண்டாட்டம் திட்டத்தில் பயிற்சியளிக்கப்படும்.

    கள்ளக்குறிச்சி கனியாமூா் தனியாா் பள்ளி மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அந்தப் பள்ளிக்கு அருகே இயங்கி வரும் 5 அரசு பள்ளிகள், 17 தனியாா் பள்ளிகள், தனியாா் கல்லூரியில் 40 வகுப்பறைகள் என காலியாக உள்ள வகுப்பறைகளில் கனியாமூா் தனியாா் பள்ளியில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கு விரைவில் பாடம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான சுற்றறிக்கை 2 அல்லது 3 நாள்களில் வெளியிடப்படும் என்றாா்.

    நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.ஏழிலரசன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் படப்பை ஆா்.மனோகரன், தமிழிசை நடனக் கலைஞா் மற்றும் மாநில திட்டக் குழு உறுப்பினா் நா்த்தகி நடராஜ், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, தண்டலம் ஊராட்சித் தலைவா் சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp