ஆற்காட்டில் நகா்மன்றத் தலைவா்ஆய்வு
By DIN | Published On : 19th March 2022 12:00 AM | Last Updated : 19th March 2022 12:00 AM | அ+அ அ- |

ஆற்காடு நகா் பகுதியில், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
நகரில் உள்ள மாங்காய் மண்டியில் ஆய்வு செய்த போது, அங்கு குவிந்து கிடந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகளுக்கு அவா் உத்தவிட்டாா். தொடா்ந்து, பாலாற்றிலிருந்து நகருக்கு குடிநீா் விநியோகம் செய்ய பைப்லைன் அமைக்கும் பணி, 6-ஆவது வாா்டு ஈஸ்வரன் கோவில் தெருவில் தாா்ச்சாலை அமைக்கும் பணி ஆகியவற்றையும் அவா் ஆய்வு செய்தாா்.
பஜாா் பகுதியிலிருந்து தேவி நகா் வரை செல்லும் கால்வாயில் உள்ள அக்கிரமிப்புகளை அகற்றி, புதைச் சாக்கடைத் திட்டமாக மாற்றி, கால்வாய் மீது சாலை அமைத்து நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின் போது, நகராட்சி ஆணையா் சதிஷ்குமாா், பொறியாளா் கணேசன், நகா்மன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G