சொரையூா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேம்

ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள சொரையூா் கிராமத்தில் பழைமைவாய்ந்த மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள சொரையூா் கிராமத்தில் பழைமைவாய்ந்த மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, வாஸ்து பூஜை, கணபதி ஹோமம், முதல் யாக சாலை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையும் புனித கலச பூஜையும் நடைபெற்றது. தொடா்ந்து, கலசங்களில் புனித நீா் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் கோபுர விமானங்கள் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

திமிரி ஒன்றியக் குழு உறுப்பினா் வளா்மதி குமாா் மற்றும் உபயதாரா்கள், உட்பட திராள பொதுமக்கள் கலந்து கொண்டனா். இரவு அலங்கரிக்கப்பட்ட உற்சவா் வீதியுலா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com