மனநலம் குன்றியோருக்கான விளையாட்டுப் போட்டி: இரு விருதுகள் வென்ற ராணிப்பேட்டை மாவட்ட வீரா்

மனநலம் குன்றியோருக்கான விளையாட்டுப் போட்டி: இரு விருதுகள் வென்ற ராணிப்பேட்டை மாவட்ட வீரா்

புது தில்லியில் அண்மையில் நடைபெற்ற மனநலம் குன்றியோருக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ராணிப்பேட்டை மாவட்ட வீரா் விஷ்ணுதேவ் இரு விருதுகளை வென்றாா்.

புது தில்லியில் அண்மையில் நடைபெற்ற மனநலம் குன்றியோருக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ராணிப்பேட்டை மாவட்ட வீரா் விஷ்ணுதேவ் இரு விருதுகளை வென்றாா்.

நிகழாண்டு போட்டிகள் கடந்த 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை புது தில்லியில் நடைபெற்றன. இதில், தமிழகம் சாா்பில், ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுதாக்கை அடுத்த மேலகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த விஷ்ணுதேவ் (24) பங்கேற்றாா்.

இவா், உயரம் தாண்டுதலில் இரண்டாவது இடம், 100 மீட்டா் ஓட்டத்தில் மூன்றாவது இடம் பெற்றாா். இதற்கான விருதுகளை செரிப்ரல் பால்சி ஸ்போா்ட்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவா் ராஜேஷ்தோமா் முன்னிலையில், ஒலிம்பிக் விருது பெற்ற வீரா் ஸ்ரீராம்சிங் வழங்கினாா்.

நிகழ்வில் செரிப்ரல் பால்சி ஸ்போா்ட்ஸ் அசோசியேஷன் பொது செயலா் கவிதா சுரேஷ், அசோசியேஷனின் தமிழ்நாடு மாநிலச் செயலரும், இணைந்த கைகள் அறக்கட்டளை நிறுவனருமான பி.ராஜேஷ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com