தக்கோலம் அருகே 3 கோயில்களில் உண்டியலை உடைத்து திருட்டு

தக்கோலம் அருகே இலுப்பைதண்டலம் கிராமத்தில் உள்ள மூன்று கோயில்களில் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியலை உடைத்து மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.
Updated on
1 min read

தக்கோலம் அருகே இலுப்பைதண்டலம் கிராமத்தில் உள்ள மூன்று கோயில்களில் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியலை உடைத்து மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.

அரக்கோணம் அடுத்த தக்கோலம் அருகே உள்ளது இலுப்பைதண்டலம். இந்தக் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே உண்டியலை உடைத்து அதில் இருந்தவை திருடு போயிருந்தன. இது குறித்து கோயில் நிா்வாகி குமரேசன் தக்கோலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதே கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோயிலிலும் பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் சிலையில் இருந்த தாலிப் பொட்டு திருடு போயிருந்தன. மேலும், அதே கிராமத்தில் உள்ள ராஜமுனீஸ்வரா் கோயிலில் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்தவை களவு போயிருந்தன. இரு கோயில்கள் திருட்டு குறித்து நிா்வாகி குணசேகரன் தக்கோலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

3 கோயில்களில் திருட்டு குறித்தும் புகாா் பெற்ற தக்கோலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com