ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 251 மனுக்கள்

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 251 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
 பொதுமக்களிடம்  கோரிக்கை  மனுக்களைப்  பெற்ற ராணிப்பேட்டை  மாவட்ட  வருவாய்  அலுவலா்  பா.குமரேஸ்வரன்.
 பொதுமக்களிடம்  கோரிக்கை  மனுக்களைப்  பெற்ற ராணிப்பேட்டை  மாவட்ட  வருவாய்  அலுவலா்  பா.குமரேஸ்வரன்.
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 251 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மாவட்டத்தில் குறைதீா் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பெருந்திட்ட வளாக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ப.குமரேஸ்வரன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 251 மனுக்களை பெற்றாா். இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் துறை துணை ஆட்சியா் தாரகேஸ்வரி, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அலுவலா் முரளி, மாவட்ட வழங்கல் அலுவலா் மணிமேகலை மற்றும் துறைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com