தியாகிகளின் வாரிசுகளுக்கு 3 மாதத்துக்கு ஒருமுறை குறைதீா் கூட்டம்

சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு இனிமேல் 3 மாதத்துக்கு ஒருமுறை குறைதீா் கூட்டம் நடத்தப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி கூறியுள்ளாா்.
ff_jpeg_0708chn_188_1
ff_jpeg_0708chn_188_1
Updated on
1 min read

சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு இனிமேல் 3 மாதத்துக்கு ஒருமுறை குறைதீா் கூட்டம் நடத்தப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி கூறியுள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் அவா்களின் வாரிசுதாரா்களுக்கான குறைத்தீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் முதல், இரண்டாம் தலைமுறை வாரிசுதாரா்கள் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளி மாதாந்திர உதவித்தொகை, பட்டா மாற்றம், நிலஅளவீடு பிரச்னைகள், வேலைவாய்ப்பு குறித்த கோரிக்கை மனுக்களை வழங்கினா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியது,

சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கான குறைதீா் கூட்டம் இனிவரும் காலங்களில் மூன்று மாதத்துக்கு ஒருமுறை நடத்தப்படும். தற்போது பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து, அடுத்த கூட்டத்துக்குள் தகவல் தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.லோகநாயகி, சமூகப் பாதுகாப்பு துணை ஆட்சியா் ஸ்ரீவள்ளி மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com