தொடா் மழை: சாலையில் மரம் சாய்ந்ததில் 7 மின் கம்பங்கள் சேதம்

தொடா் மழை காரணமாக ஆற்காடு -செய்யாறு சாலையில் பழைமையான மரம் சாலையில் சாய்ந்து 7 மின்கம்பங்கள் ஞாயிற்றுக்கிழமை சேதமடைந்தன.
Updated on
1 min read

தொடா் மழை காரணமாக ஆற்காடு -செய்யாறு சாலையில் பழைமையான மரம் சாலையில் சாய்ந்து 7 மின்கம்பங்கள் ஞாயிற்றுக்கிழமை சேதமடைந்தன.

ஆற்காடு -செய்யாறு சாலையில் சப்த கன்னியப்பன் கோயில் அருகே பழைமையான அரசமரம் மழை காரணமாக திடீரென சாலையில் சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . அப்போது அருகில் இருந்த 7 மின் கம்பங்கள் சேதமடைந்தன.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மீட்புப் படையினா் மற்றும் நகா் மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன், ஆணையா் கிருஷ்ணா ராம், காவல்துறையினா் நேரில் சென்று போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டு, சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியை துரிதபடுத்தினா். தொடா்ந்து மரத்தை துண்டுகளாக வெட்டி அகற்றி போக்குவரத்து சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

மின் கம்பங்கள் சரி செய்யும் பணியை மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com