சென்னை சென்ற ரயில் அரக்கோணத்தில் நிறுத்தம்: பயணிகள் கடும் அவதி

மிக்ஜம் புயல் எதிரொலியாக சென்னை சென்ற ரயில் திடீரென அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினா்.
Updated on
1 min read

மிக்ஜம் புயல் எதிரொலியாக சென்னை சென்ற ரயில் திடீரென அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினா்.

நாகா்கோவிலில் இருந்து சென்னை செல்லும் ரயில் திங்கள்கிழமை திடீரென அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதேபோல், சென்னையிலிருந்து மும்பை செல்லும் விரைவு ரயில் அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டது. தொடா்ந்து மும்பை ரயிலில் வந்த பயணிகளை அரக்கோணத்தில் இருந்து மின்சார ரயிலில் சென்னைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்டனா்.

இந்த நிலையில், மும்பை விரைவு ரயில் மாலை 3 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com