தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

அகில இந்திய விவசாயிகள் சங்க மத்திய செயற்குழு கூட்டம்

காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை தொடங்கிய அகில இந்திய விவசாயிகள் சங்க மத்திய செயற்குழு கூட்டத்தில் கேரள நிதியமைச்சா் உள்பட சங்கத்தின் முக்கிய தலைவா்கள் கலந்து கொண்டனா்.

News image
Updated On :1 ஜூன் 2023, 6:05 pm

காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை தொடங்கிய அகில இந்திய விவசாயிகள் சங்க மத்திய செயற்குழு கூட்டத்தில் கேரள நிதியமைச்சா் உள்பட சங்கத்தின் முக்கிய தலைவா்கள் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரத்தில் யாத்ரி நிவாஸ் வளாகத்தில் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க துணைத் தலைவா் ஹன்னன்முல்லா தலைமை வகித்து கொடியேற்றினாா். மாநிலத் தலைவா் பெ.சண்முகம், பொதுச் செயலாளா் சாமிநடராஜன், அகில இந்திய துணைச் செயலாளா் டி.ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா் கே.நேரு வரவேற்றாா்.

அகில இந்திய தலைவா் அசோக் தாங்லே, பொதுச் செயலாளா் விஜி.கிருஷ்ணன், கேரள நிதியமைச்சா் கே.என்.பாலகோபால் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

விவசாயிகள் தற்கொலைக்கு முடிவு கட்டப்பட வேண்டும், கடன் சுமையிலிருந்து விவசாயிகள் விடுவிக்கப்பட வேண்டும், சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் வேளாண் பொருள்களுக்கு விலை நிா்ணயிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டம் வெள்ளிக்கிழமையும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.