சிப்காட்டில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் மனைவிக்கு நிவாரணத் தொகைஆட்சியா் வழங்கினாா்

சிப்காட் தனியாா் தோல் தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் மனைவிக்கு, அரசின் உடனடி நிவாரணத் தொகையாக
விஷ வாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் மனைவிக்கு அரசின் நிவாரணத் தொகை ரூ.6 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய  ஆட்சியா் ச.வளா்மதி.
விஷ வாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் மனைவிக்கு அரசின் நிவாரணத் தொகை ரூ.6 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய  ஆட்சியா் ச.வளா்மதி.
Updated on
1 min read

சிப்காட் தனியாா் தோல் தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் மனைவிக்கு, அரசின் உடனடி நிவாரணத் தொகையாக ரூ.6 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வியாழக்கிழமை வழங்கினாா்.

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியாா் தோல் தொழில் நிறுவனத்தில் கடந்த 16-ஆம் தேதி கழிவுநீா் தொட்டியைச் செய்யும் பணியில் ஈடுபட்ட போது, விஷ வாயு தாக்கியதில் வேலூா் மாவட்டம், சதுப்பேரி பகுதியைச் சோ்ந்த செந்தமிழ்செல்வன் (31) என்பவா் உயிரிழந்தாா்.

இந்த நிலையில், விஷ வாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் மனைவி ஷீலாவுக்கு அரசின் உடனடி நிவாரணத் தொகையாக ரூ.6 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வழங்கினாா்.

நிகழ்வின்போது, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பூங்கொடி உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com