தக்கோலம் பேரூராட்சி மன்றக் கூட்டம்

தக்கோலம் பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.நாகராஜன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தக்கோலம் பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.நாகராஜன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பேரூராட்சி செயல் அலுவலா் மாதேஸ்வரன், துணைத் தலைவா் கோமளா ஜெயகாந்தன் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தை 4 பள்ளிகளில் செயல்படுத்துவது, பேரூராட்சி பகுதியில் உள்ள மேல்நிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகளில் பயின்று பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பிடிக்கும் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, பொதுமக்களின் நலனுக்காக பேரூராட்சி அலுவலகம் முன்பு தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com